தேசத் தந்தை காந்தியடிகளிடம் சுதந்திரம் என்றால் என்ன? என்று வினா எழுப்பிய போது, ஓர் இளம் பெண் நிறைய நகைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் இந்நாட்டின் தெருக்களில் பயமின்றி நடமாடக் கூடிய நிலைக்குப் பெயர்தான் சுதந்திரம் என்று சொன்னார்.
இப்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கும் காந்தியடிகள் சொன்ன சுதந்திரத்திற்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன என்பதை தேசம் எண்ணிப் பார்க்க வேண்டும். 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாடும் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
குண்டு மனிதர்கள் வீதியில் உலாவரலாம் மனித குண்டுகள் தெருக்களில் சுற்றுவதாக வதந்தி பரப்பி னால், என்ன ஆகும். தூங்கும் சுதந்திரம் கூட தூக்கில் போடப்பட்டு விட்டது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த வீரத் தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்து பெரும் வல்லரசாய் நாட்டை உருவாக்க உறுதி பூண்டு இதய எழுச்சி யுடனும், மன மகிழ்ச்சியுடனும், முக மலர்ச்சியுடனும் கொண்டாடப்பட வேண்டிய சுதந்திரதினம் பயத்துட னும், பதற்றத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும், மக்களை ஆக்குவது வேதனைக்குரியது.
இதற்குத் தானா நமது விடுதலை வீரர்கள் இன்பங்களைத் துறந்தார்கள்? இன்னுயிரை ஈத்தார்கள்? ஆங்கிலேயரின் கொடிய சிறைகளில், தம் இனிய இளமையைப் பலியிட்ட நம் முன்னோர்கள், தங்களுக்குக் கிடைக்காத உரிமைகளும், நிம்மதியான வாழ்வும், தங்கள் சந்ததிகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த இலட்சியப் போரில் தங்கள் ஓருயிரையும் தந்தார்கள்.
நம் நாட்டின் சூழல், எஞ்சியிருக்கும் விடுதலைப் போராளிகளின் நிம்மதியையும் பறித்திருக்கிறது.
விடுதலைக்குப் பிறகு தேனாறும், பாலாறும், தெருதோறும் ஓடும் என்றார்கள். குறைந்த பட்சம் ரத்த ஆறு ஓடாமல் இருந்தால், நிம்மதியாக இருக்கும்.
விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பல்வேறு துறைகளில் இலட்சிய உயரங்களை எட்டி இருக்கிறோம். அது பாராட்டுக் குரியது. அதே நேரம் வன்முறையின் வளர்ச்சி வேதனைக்குரியது.
அண்ணல் காந்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தி இயந்திரத் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் சிதறடிக்கப்பட்டார். அப்பாவி மக்களை சதிகாரக் குண்டுகள் சாகடித்துக் கொண்டி ருக்கின்றன.
உண்மையான பயங்கரவாதிகளையும், பயங்கர வாதத்தின் வேரையும் கண்டறிந்து, அடியோடு களையெடுக்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் விருப்பம். ஆனால், பயங்கரவாதப் பழிகளை ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீதே சுமத்த வேண்டும் என்பது ஆதிக்க மதவெறியர்களுக்கும், அவர்களின் ஆயுதங்களாய் மாறிப்போன ஊடகங்களுக்கும் ஒரே நோக்கமாக உள்ளது.
நாட்டிற்காக தியாகம் செய்த ஒரு சமுதாயத்தை தேசத் துரோகிகளாக சித்தரிக்கும் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை.
சுதந்திரத்தைப் பற்றி
''நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை''
என்று எழுதினார் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் மாணவர் அரங்கநாதன்.
அவன்
ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டி இருந்த கோவணமும்
களவாடப் பட்டது.
என்ன தந்தது இந்த சுதந்திரம்.
அப்பனின் திருவோட்டை
புத்திரனுக்கு இது
புதுப்பித்துத் தந்தது''
லி என்கிறார் வைரமுத்து.
அண்ணல் காந்தியே!
நீ எங்கள் கையில்
அட்சயப் பாத்திரத்தைத்
தந்து சென்றாய்,
இப்போது எம் கையில்
இருப்பதோ பிச்சைப் பாத்திரம்'
இந்த மாற்றத்தை செய்த மந்திரவாதிகள் யார்?
தேசத் தந்தையே,
உனக்கு சேரிகள் பிடிக்குமென்பதால் தானா
தேசத்தையே சேரியாக்கி விட்டார்கள்,
லி என்று கொதிக்கிறார்லிமு.மேத்தா...
நாட்டில் பற்று வைப்பவர்களை விட
நாட்டைப் பற்ற வைப்பவர்கள்
நம் தலைவர்கள், - என்பது புதியவனின் குமுறல்,
சுதந்திரம் என்பது வெறும் சொல்லல்ல. அது ஓர் உன்னத இலட்சியம். தேசம் என்பது, மண்ணும், மலையும், கடலும், நதியும், காடும், மேடும் மட்டுமல்ல..
தேசம் என்றால் மக்கள். தேசப் பற்று என்றால், மக்களின் மீது கொள்ளும் அன்பு.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment